'பார்த்தேன், எழுதுகிறேன்' தொடரின் அவதான கட்டுரைகள். கல், கதவு, பனைமரம், இனங்கள் — அன்றாட உலகின் பொருட்களில் பொதிந்திருக்கும் பொருட்பல தனது.
சோழர்கள் காலத்துக் கோவில்களைப் பார்த்த போது எனக்குள் கல்லைப்பற்றி ஒரு புது ருசி ஏற்பட்டது. எரிந்தால் ஆயுதம்; கட்டினால் இருப்பிடம்; வடித்தால் சிற்பம்; வைத்தால் இறைவன்.
கதவு என்பது ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பு மட்டுமா? செட்டிநாட்டு தேக்கு மரக்கதவுகள் முதல் துருக்கியின் கப்படோசியா சுழல்கற்கதவுகள் வரை — ஒரு வீட்டின் அடையாளம் அதன் கதவில் தெரிகிறது.
தமிழ் இலக்கியத்தின் அத்தனை வளமான கவிதைகளும், காவியங்களும் எழுதப்பட்டது இந்தப் பனை ஓலையில்தான். பனை வெறும் விருட்சமா? இல்லை — ஒரு காலத்தில் அநேகம்பேருக்கு வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது.
இரண்டெழுத்துச் சொல்லான அடியில் ஆயிரம் அர்த்தங்கள்! — ஒரு பாதிப்பு, மரத்தின் அடி, செய்யுளின் அடி, இறைவனின் திருவடி. "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்ற பழமொழியிலிருந்து மாணிக்கவாசகரின் பக்தி, பரதனின் பாதுகை ஆட்சி, கம்பன் தனது மகன் அம்பிகாபதியைக் காப்பாற்றியது, செய்யுளின் அளவுகள் வரை.
செட்டிநாட்டு வீட்டுத்தூண்களின் கலை நுணுக்கம், அசோகரின் சாரநாத் தர்மஸ்தம்பம், அலகாபாத் தூண், யூப வேள்வித் தூண், உமர்கய்யாமின் மினார் கவிதையை கவிமணி தமிழாக்கியது, ஒள்வையின் மூதுரை, அஹோபிலத்து உக்கிரஸ்தம்பம் — தூண்களில் உறையும் சரித்திரம், பக்தி, உறுதியின் தியானம்.
ஐந்து வயதில், கானாடுகாத்தான் 3/120 அரு.வீதியின் உட்புற அறை ஜன்னலைக் குனிந்து நிமிர்ந்து பார்க்கும்போது, இந்த உலகம் அவளுக்குத் திறந்துகொண்டது. அதற்குப் பிறகு வாழ்ந்த ஒவ்வொரு வீட்டிலும் — திருச்சி, கனடா, ஜெனிவா, சிங்கப்பூர் — ஜன்னல்தான் அவளுக்கு அனைத்தையும் நோக்கிய வாசல்.
ஜூராங்கின் வீவக வீட்டு பால்கனியில் ஒரு கொரோனா-கால இரவு. நிலவொளியில் ஒளிரும் சீனத் தோட்டத்துக் குளங்கள், காற்றில் இன்னும் ஒலிக்கும் முருகன் கோவில் மணி, பாம்பு போல் ஊர்ந்து செல்லும் எம் ஆர் டி ரயில். உள்ளே மூன்று தலைமுறை குடும்பத்தின் பரபரப்பு — மருமகள் வளர்மதியின் கண்-கண்டிப்பு, பேரன் மதிவண்ணனின் கிரிக்கெட், விடியற்காலைக் காணொளிக் கூட்டங்கள். பின் கீழ்த் தள சீனத் தம்பதியின் புகார் — இது இனப்பாகுபாடு என்று எரியத் தொடங்கியது, ஒரு சின்ன நாட்டில் ஒன்றாய் வாழ்வதென்றால் என்ன என்பதைப் பற்றிய அமைதியான சிந்தனையில் முடிகிறது.
சில வலிகள் எதனோடும் ஒப்பிட முடியாதவை. ஒரு குரல், ஒரு சிரிப்பு, ஒரு பாடல் — நினைவுகளில் தேடியும் கிடைக்காத பொழுதில் எழும் வலி; எப்போதும் திறந்தே இருந்த கதவு இனி திறக்காது என்னும் தெளிவில் எழும் வலி; ஒரு தொலைபேசியின் மறுமுனையில் இனி யாரும் இல்லை என்னும் அறிதலின் வலி. கம்பனின் தசரதன், பாஞ்சாலி, தமயந்தி, சீதை, கண்ணகி, சித்தார்த்தன், மண்டேலா, காந்தி — பின்னர் ஒரே பளிங்கிலிருந்து உருவான சிலையும் தரையும் கொண்ட சிறுகதை. வலியே பொறுமையின் ஆசான், என்று முடிக்கிறார்.