பயம்! பயம்! பயமென்ற இந்தச் சொல் எனக்குள்ளாக எத்தனை ஆண்டுகள் ஒளிந்து கொண்டிருக்கிறது? உடலோடு ஒட்டிய ஒரு மச்சத்தைப் போல இந்தப் பயமும் என்னோடேயே கூடவே எப்போதும் பயணம் செய்து கொண்டு இருக்கிறது! சொல்லப் போனால், இந்த பயத்துக்கு எப்போதும் தயவாதாதில்லை...உண்மையிலேயே ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு இணங்கும்படியான ஒருவித பயத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை....
நமக்குச் சிறு பிராயத்தில் குழந்தைகளாக இருக்கும்போதே சாதத்தோடு பயமும் சேர்ந்து ஊட்டப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனமான காரணம்....சாப்பிட முரண்பட்ட குழந்தைகளை முன்பின் அறியாத ஒரு ரெட்டைக் கண்ணன் வந்துட்டான் (எல்லோருக்கும் ரெட்டைக்கண் தான்! ஆனாலும் குழந்தைகள் மிரண்டு போகும்படி ஒரு சத்தத்தில் அப்படிச் சொல்லும்போது பயம் ஏற்படுகிறது!)....பூச்சாண்டி வந்துட்டான்....
நானும் இந்தப் பயத்திற்கு விதி விலக்கல்ல. திக்திக்கென்ற பயம் என்னை நிறையச் சீரழித்திருக்கிறது...நான் கொண்ட பயம் ஒருவர் என்னை விட்டுப் போய்விடுவார் என்பதில் ஆரம்பித்தது. அப்பா தோட்டத்து வேலையில் போகும்போது நான் பள்ளிக்குப் போய்விட்டால், அப்பாவைப் பார்க்க மாட்டேன் என்ற பயம்...அதனால், அதிகாலையிலேயே எழுந்து அப்பா ஸ்னானம் செய்யும் முன்னாலேயே அவர் சட்டை பாக்கெட்டில் ஒரு சின்னத் தாளில் "I love you appa" என்று எழுதி மடித்து வைத்து விட்டு அப்புறம் தான் பள்ளிக்குப் போவது நடக்கும்!
பிறிதொரு நாள் சுய சிந்தனையின் வெளிப்பாடாகக் கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகம் புரிந்து போனது...*"வேண்டாய் படுவாய் வானே கேள்...பயத்தால் ஏதும் பயனில்லை"* என்று பாரதி சொல்வது போல் பயம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு விலக ஆரம்பித்தது....உண்மையிலேயே பாரதியின் பாட்டு என்னைப் புதியதோர் பிறவியாய் ஆக்கி விட்டது என்பேன். *"நெஞ்சில் உரன் நிறமும், அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை"* என்று சொல்கிறானே! *பயமென்னும் பேய் தனை அடிப்போம்* என்கிறான். *அச்சம் தவிர்க!* இந்த ஒரு வரி நிலையை கிடைக்க வேண்டுவோம்.
அன்புடன், பானுரவி
With love, Banooravi