எனக்கு எதனாலோ வெயில் ரொம்பப் பிடிக்கும். ஒருவேளை சித்திரையைத் தொடர்ந்து வரும் வைகாசியில் பிறந்ததாலா? கண்ணுக்கு ஒரு பிரகாசமான ஒளியுருவமாகத் தன்னைக் கடவுள் தினமும் அனைவரும் காணும்படி காட்சி தருவதாலா? அல்லது பானுமதி என்ற எனது பெயரில் முதல்பாதியாக இருந்து கொண்டு எனக்கு ஒரு வெளிச்சப் பாதையைக் காட்டுவதாலா... தெரியவில்லை.
"மந்தை மந்தையாய் மேகம் — பல வண்ணமுறு கொடைவெயில் மழைவந்து பெய்யும், முந்தவே சூரிய னுண்டு.... அதன் முகத்தொளி கூறுதற்கோர் மொழியில்லை கண்டீர்" ஓ! பாரதி என்றதும் இப்போது என் மனம் அவனிடம் போய்விட்டதே? எங்கே ஆரம்பித்தது இந்த அபிமானமும் பற்றும்? அநேகமாகப் பள்ளிகளில் தான் என்றாலும், இயல்பிலேயே எனக்குள் இருந்த தமிழ்ப்பற்றும் கூடக் காரணம் என்றே தோன்றுகிறது.
"சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் பெறுவதும் பாரினில் பெண்கள் நிகழ்த்தவேண்டியது நடக்கிறதே! ஆயுதம் செய்வது சாத்தியமாகி இருக்கே!" கவிஞர்கள் நினைப்பதும், கூறுவதும் அன்றிலிருந்து இன்று தொட்டு பலிப்பதாகவே இருக்கிறது. அவன் நினைத்து நடந்தது தான்...ஆனால் அவன் அனைவையெல்லாம் நடக்கும் முன்பே தீர்க்கதரிசியாகி அனைத்தையும் அகத்தில் கண்டு நினைவு கொண்டதல்லவா ஆச்சர்யம்?
"வானமெங்கும் பரிதியின் ஜோதி! மலைகள் முகட்டிலும் பரிதியின் ஜோதி! தானைநீர்க் கடல் மீதிலும் ஆங்கே தருக்களின் மீதும் தரையின் மீதும் கானகம் மீதும் பற்ப ஆற்றினைக் கரையின் மீதும் பரிதியின் ஜோதி! மானிடன்தன் உள்ளத்தில் மட்டும் வந்து படர்ந்திடும் இருளிது என்னே???" சூரியனில் ஆரம்பித்துச் சூரியனிலேயே முடித்து விட்டேன்.
அன்புடன், பானுரவி
With love, Banooravi