அம்மா, தனது நாற்பதுகளில் சேகரைச் சுமந்த போது ரொம்பவே வெட்கப்பட்டிருக்கிறாள். அடிக்கடி வெந்நீர் அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்துத் தின்ற காட்சி நிழல் படலமாகத் தெரிகிறது. ரொம்பவும் கூச்சத்தோடு தன்னை மிகவும் நொந்து கொண்டு இருந்த சமயங்களில் விஜயாக்கா ஒரு யானைபலமாக இருந்து அவ்வப்போது ஆதரவாகவும் அன்பாகவும் பேசி அம்மாவைத் திடம் கொள்ளச் செய்தாள்.
கானாடுகாத்தான் ஆஸ்பத்திரியில் சேகர் பிறந்தபோது, நானும் ராஜாவும் உச்சாகமாகப் பந்தாகப் போய்ப் பார்த்தோம்...எனக்கும் ராஜாவுக்கும் அம்மா தனக்குக் கொடுத்திருந்த பன்னொட்டியைக் கொடுத்தார். பஞ்சு போல் மென்மையாக வெள்ளையாக இருந்த அந்த பன்னொட்டியை அப்போதுதான் முதலில் ருசித்ததாக நினைவு...
சாயங்காலம் நெல் பரப்பி, ஆகியந்த தொட்டில் போட்டு, அம்மாவின் பட்டுப்புடவையை விரித்துக் கூடத்தில் பேர் சூட்டும் விழா....பெரியதாமி என்று அப்பா அந்த நெல்லில் எழுதினாலும் சந்திரசேகர் என்று பேரிட்டார்கள். 'அன்பில் மலர்ந்த நல்ரோஜா' என்ற பாட்டை அக்காவும், "சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர் சிந்திடும் அழகே ஆனாளோ" என்று இந்திராணியும் நானும் தொட்டிலிட்டபோது பாடினோம்.
வானா ஏன்று தீவிரமாகக் கானாடுகாத்தான் ஆஸ்பத்திரியிலே நின்னு பிரசவம் பார்த்துண்டு இருந்த அதே டாக்டர் பெரியதம்பி ஆஸ்பத்திரியில் வானா பிறந்தபோது...சேகருக்கு 11 வயது. வானாவும் சேகரும் அப்பா போல சூரியபுத்திரர்கள்... "மலர்ந்து மலராத பாதி மலர்போல..வளரும் விழியோடு வந்தாய் கண்ணா"...பாட்டு சத்தம் போட்டுக் கேட்கணும். வாசித்தவர் எஸ். ஜாஹாபிரீன் பேகம். மாலை 5 மணி நெஞ்சமே நெஞ்சமே தினப் பாட்டாக ஏற்க, அன்றைய காலை பத்து மணிக்கு ஏற்கப்பட்ட பாட்டு இது.
அன்புடன், பானுரவி
With love, Banooravi