கதை 12

ஒப்பனைகள்

அழகாக இருக்க வேண்டுமென்று எல்லோருக்கும் தோன்றுவது இயல்பிலேயே உள்ள ஒரு குணம். அழகாக இருந்தாலும், கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டு, ஒப்பனையுடன் காட்சி தர வேண்டுமென்று நினைப்பதும் அனைவருக்கும் தரக்கூடிய ஒரு எண்ணம் தான். அதுவும் பெண் குழந்தைகளுக்கு இம்மாதிரியான ஒரு எண்ணத்தை ஆரம்பத்திலேயே ஒரு தாயார் தான் அநேகமாக உண்டாக்கி வளர்த்து விடுகிறார் என்பதே உண்மை.

வீட்டிலேயே அம்மா கண் மை தயாரிப்பார். உள்ளம் என்றழைக்கப்பட்ட அறையில், நாங்கள் எல்லோரும் பள்ளிக்குச் சென்ற பிறகு ஒரு நல்ல வெள்ளைக் காடாத் துணியை சுத்தமான விளக்கெண்ணெயில் நனைத்து, அதை ஒரு வெண்கல விளக்கில் வைத்து ஏற்றி, அதன் மீது ஒரு பெரிய பித்தளைத் தாம்பாளத்தைக் கவிழ்த்து வைத்து விடுவார். அந்தக் காடாத் திரியானது முழுவதும் எரிந்து அதன் கரும்புகை, அந்தத் தாம்பாளத்தில் மெல்லிய பவுடராகப் படிந்திருக்கும். இதற்குக் குறைந்த பட்சம் ஒரு இரண்டு மணி நேரமாவது ஆகும். அது முழுவதும் எரிந்தவுடன், மெதுவே அந்தக் கரிய பவுடரை எடுத்து விளக்கெண்ணெய் விட்டுக் குழைத்து...

விஜயாக்கா தனக்கென்று மைசூர் சந்தன சோப்பும், பியர்ஸ் சோப்பும் உபயோகிப்பார். அதே போல் கோகுல் சந்தனப் பவுடரும் அவர் மட்டுமே உபயோகிப்பார். எங்களுக்கெல்லாம் செவி பவுடரும்...லைப்பாய் சோப்பும் தான். ஒரு தடவை ராதை சித்தி தந்திருந்த போது வீட்டிலேயே முற்றத்தில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கொண்டே குங்குமம் தயாரித்தது நினைவில் இருக்கு. நல்ல மஞ்சள் கிழங்கை மெய்யிலில் உரக்ட்டி அதை நன்றாகப் பொடித்து, நைஸாக சலித்து எடுத்துக் கொண்டு, படிக்காரமும், எலுமிச்சை சாறும் விட்டுக் கலந்தவுடன் நல்ல அரக்கு வண்ணத்தில் குங்குமம் கிடைக்கும்.

இப்படியாக உடல் நலம் மட்டுமின்றி, உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் இயற்கையான முறையில், முக்கியமாக எந்த ஒரு களப்படமும் இல்லாமல் காப்பாற்றித் தந்திருக்காள் நம் அம்மா, இந்த உடம்பும், உயிரும், அவர் நமக்கு உண்டாக்கித் தந்தவை அல்லவா? "கற்பும் கருணையும் நற்பால் ஒழுக்கமும் மெல்லிய பெறையும் நிறைந்திடு குணமும் விருந்து புறத்தலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன பெண்டிர் மாண்பே!" — இப்படித்தான் தமிழ் இலக்கியமான தொல்காப்பியம் கூடச் சொல்கிறது.

அன்புடன், பானுரவி

With love, Banooravi