வீட்டின் கூடத்துச் சுவர் வெள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. அடித்த சுண்ணாம்பு காய்ந்ததும், அச்சுவற்றில் காவியால் ஒரு அழகிய மண்டபம் outline-இல் அழகாக வரையப்பட்டிருக்கு....அதன் மறுநாள், அதற்கும் மறுநாள் என்று நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வந்து பார்க்கும்போது, அந்தச் சுவற்றில் ஏதோ மந்திர ஜாலம் நிகழ்ந்தாற் போல் தினமும் ஒரு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது....
பின்னே? மயன் செய்த மாளிகை போல அங்கே ஒரு மாளிகை அல்லவா காட்சி தருகிறது? கூடவே இந்திரனின் ஐராவதங்களும், தோகை விரித்தாடும் அழகு மயில்களும், பசுங்கிளிகளும், பழுத்துக் குலை தள்ளிய பசசலென்ற செழித்த வாழை மரங்களும், வண்ணமலர்த் தோரணங்களும், இது என்ன....அட..அடா....அந்த மணி மண்டபம் மரகதத்தாலும், பவளத்தாலும், நீலம் பாரித்த முத்துக்களாலும், சிவந்த ரத்தினங்களாலும் ஆனது போல் அல்லவா தகதகக்கிறது!
ஆஹா....விரைவில் வரப்போகும் வரலக்ஷ்மி விரதத்திற்கான வண்ணக் கோலங்களின் துவக்கமல்லவா இது? நம் அம்மாவின் கைகளில் இருந்த கலைஞானம் சாமான்யமா? இலக்கணத்தோடு, கலையையும் படைத்துச் சூளுரைத்த கலைமகளின் அருளோ அம்மாவுக்கு! எத்தனை நாட்களுக்கு இந்த வண்ண ஜாலத்னதப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்! செருக்கான அந்த மண்டபத்தில் ஒரு நாளில், மகாலக்ஷ்மியின் சிலை எழுதப்படுகிறது.
தோசைக் கல்லில் ஏற்றுமதி ரகசியம்... மஞ்சள் பூசிய சம்புக் கலசம், ஒரு கொத்து வாழை, தேங்காய், வெற்றிலை பாக்கு, தூப தீபம், சந்தனம், குங்குமம், பச்சை கற்பூரம், அகர்பத்தி, மஞ்சள் நூல்....எல்லாம் ஆயத்தம். நோன்பு விரதம் நமது குடும்பத்தில் எத்தனை பெரியதாகக் கொண்டாடப்பட்டது என்று நினைத்தால் நெஞ்சம் நிறைகிறது. *பிறந்த நாள்முதல் அமுதம் தந்து, அறிவைத் தந்து, கலைகள் தந்து, கற்றுத் தந்த வரமஹாலக்ஷ்மி, நமது அம்மாவைன்றி யாராக இருக்க முடியும்?*
அன்புடன், பானுரவி
With love, Banooravi