கதை 6

அயலவர்கள்

ஒரு புன்னகையும் ஒரு கை குலுக்கலும் எப்போதும் வரவேற்கப்படுவதே. ஒரு நல்ல அண்டை வீட்டார் என்பது யாருக்கும் கிடைக்கிற பெரிய ஆசீர்வாதமே. குழந்தைகள் தொலைவில் இருக்கும் போது, அண்டை வீட்டார் தான் கஷ்ட காலத்தில் உதவுகிறார்கள். "தெய்வம் மனிதர் கோலம்" என்பதற்கேற்ப தான்.

குவைத்தில் இருந்த போது, ஒரு எகிப்திய குடும்பம் நமது அண்டை வீடு. அவர் தச்சுத் தொழிலாளி, அவர் மனைவி தையல்காரி. அழகான பெண்ணொருத்தி அவர்களுக்கு. 3 வயதான ஜயந்த்துக்கு விளையாட்டுத் தோழியாக இருந்தாள் அவள். இரட்டை குழந்தைகளை நான் சுமந்த போது, அந்தப் பெண்மணி தினமும் பெரிய கோப்பை நிறைய ஜூஸ் கொடுப்பாள்... என் வாந்தியின் சத்தம் கேட்டவுடன் ஓடி வந்து விசாரிப்பாள்...

இப்போது நாம் பார்க்கும் இந்த வீடுகளில், நமக்குக் கிடைக்கும் அந்த அன்பும், அந்தக் கவனிப்பும், அந்த விசாரிப்பும் கானாடுகாத்தானில் நம் அக்கம் பக்கத்து வீட்டார் கொடுத்ததில் இருந்தே வந்திருக்கிறது. முதல் வீடு, வலது புறம் பிச்சை பண்ணும் ஆச்சியின் வீடு...குடு குடு அதற்கடுத்து செட்டியாரும் ஆச்சியும்.அவர்களுக்கு நாலு மகள்கள். அங்கு வாடகைக்கு இருந்தவர்கள் உடுமலைப் பேட்டை மாமா, மாமி, ஒரே பையன். அவன் டாக்டராக இருக்கான். சிங்கள பெயர்.

எல்லோருடமும் ஒரு வகையான பாசமான பந்தம் இருந்தது. நமது சந்தோஷங்களையும் சோகங்களையும், எல்லாவற்றையும் அந்தக் கடை விரிவு வரை பரிமாறிக் கொள்வோம். எவரும் தனியாக இல்லை. அந்தத் தெரு முழுவதும் ஒரு பெரிய குடும்பம் போல்...அக்கம் பக்கம் என்று யாராவது இல்லாமலேயே யாரும் வாழ முடியாது...அது தான் மனித வாழ்வின் அழகு.

அன்புடன், பானுரவி

With love, Banooravi